உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் சீனாவில் திறந்து வைப்பு

சீனாவில் ஹூணன் மாகாணத்தில், ஷாங்ஜியாஜியே மலைப் பூங்காவின் இரு மலைகளுக்கு இடையே அமைக்கப்பட்ட உலகின் மிக உயரமான மற்றும் நீளமான கண்ணாடிப்பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இப்பாலத்தின் நீளம் 430 மீட்டர் (1,400 அடி) பூமியிலிருந்து 300 மீட்டர் உயரத்தில் இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

2-3

6 மீட்டர் அகலத்தில், பலமான 99 கண்ணாடித் தகடுகளால் உருவாக்கப்பட்டுள்ள இப்பாலத்தை, ஒரே நேரத்தில் 800 பேர் கடக்கலாம்.

சுற்றுலா தளமாக உள்ள ஷாங்ஜியாஜியே மலைப் பூங்காவில், மேலும் பல சுற்றுலா பயணிகளைக் கவரும் நோக்கில் இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வடிவமைத்தவர் ஹாய்ம் டோடன் எனும் இஸ்ரேலைச் சேர்ந்த பொறியியலாளர்.