உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று(30) பெரிய வெள்ளியை அனுஷ்டிக்கின்றனர்.
புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்பது கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவு கூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அனுஷ்டிக்கும் தினமாகும்.
குறித்த இந்நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக் கிழமையாக கருதப்படுகிறது. இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூர்கின்ற இன்றைய நாளில், கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.