(FASTGOSSIP | COLOMBO) – உலகில் எந்தவொரு பயங்கரவாத அமைப்புக்களும் ஆயுத உற்பத்தியை மேற்கொள்வதில்லையெனவும் உலகில் பலமான வல்லரசு நாடுகளே அவற்றை உற்பத்தி செய்வதாகவும், அந்த நாடுகள் அவ்வாறு செய்யாது போனால், உலகில் பயங்கரவாதம் இல்லாது போய் விடும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று(12) பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.