உலக்கிண்ண போட்டியிலிருந்து விலகினார் மாலிங்க

இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து லசித் மாலிங்க விலகியுள்ளார்.

அவர் இலங்கைக்கு திரும்பவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இருபதுக்கு 20 உலக க்கிண்ணத்தொடரில் விளையாடும் பொருட்டு உபாதையுடனேயே அவர் இந்தியாவிற்கு சென்றிருந்தார்.

எனினும் அவரது உபாதை மேலும் மோசமடையக் கூடுமென்பதால் அவருக்கு ஓய்வளிக்க இலங்கை அணி முகாமைத்துவம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை இன்று ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இருபதுக்கு 20 பயிற்சி போட்டிகளை அவதானித்து அதிலிருந்து சிறப்பானதொரு மாற்று வீ ரர் தெரிவுசெய்யப்படவுள்ளதுடன் அவர் மாலிங்கவின் இடைவெளியை நிரப்பவுள்ளார்.