உலக சந்தையில் எரிபொருள் விலையானது பாரியளவில் வீழ்ச்சி… இன்று டீசல் – பெட்ரோல் விலைகள் குறைகின்றது…

அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய இன்று(10) விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக சந்தை விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு அமைய இலங்கையின் எரிபொருள் விலையை ஒவ்வொரு மாதமும் 10ம் திகதி விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளது.

ஆதலால், குறித்த விலை நிர்ணயக் குழு இன்று மாலை எரிபொருள் விலைகளை அறிவிக்கவுள்ளது.

எவ்வாறாயினும், இம்முறை எரிபொருள் விலைகள் அதிகரிக்க இடமுள்ளதாக பாராளுமன்ற அமர்வின் போது நேற்று(09) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

ஆனால் உலக சந்தையில் எரிபொருள் விலையானது 7-8% குறைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.