கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதாக உலக பொருளாதார தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, ஒரு பீப்பா மசகு எண்ணெய் 81.20 டொலர்களாக அதிகரித்துள்ளது. டபிள்யு. ரி.ஐ. ரக ஒரு பீப்பா மசகு எண்ணெய் 72.08 டொலர்களாகவும் உயர்ந்துள்ளது.
இலங்கையில் அறிமுகம் செய்துள்ள புதிய சூத்திரத்தின் படி எதிர்வரும் 10 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாக ஏற்கனவே பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.