(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் பிரச்சினையில் சீனா பக்கம் சாய்ந்து விட்டது என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.
வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்ப் ‘உலக சுகாதார நிறுவனம், சீனாவின் பக்கம் மிகவும் சாய்ந்து விட்டது. இதில் ஏராளமான மக்கள் வருத்தம் அடைந்திருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் மிகவும் நியாயமற்று நடந்து கொள்கிறது என்ற பேச்சு பரவலாக எழுந்து இருக்கிறது.
உலக சுகாதார நிறுவனம், நியாயமுடன் நடந்து கொள்ளவில்லை என்று ஏராளமானோர் உணர்கிறார்கள்’ என தெரித்துள்ளார்