உலக புகைத்தல் எதிர்ப்பு தினம்

(எம்.ஜே.எம்.சஜீத்)

இந்த நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சமாதானமாக இடம் பெற்று வருகின்ற நிலையில் போதை வஸ்து மற்றும் புகைபிடிப்பு போன்ற கொடிய பயங்கரமான சூழல் நிறைந்து காணப்படுகிறது.

இவைகளை ஒழிப்பதற்கு பொதுமக்களும் மாணவர்களும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் என அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஐ.எம். ஹனிபா தெரிவித்தார்.

புகைத்தல் மற்றும் போதைவஸ்து போன்றவைகளை ஒழிக்கும் நோக்குடன் வருடா வருடம் புகைத்தல் ஒழிப்பு தினம் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனையிட்டு அக்கறைப்பற்று பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புகைத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் சமூக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.டி. சமந்த தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேற்கன்டவாறு தெரிவித்தார்.

இவ்விழிப்புனர்வு ஊர்வலம் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் இருந்து பிரதேச செயலகம் வரை சென்று போதைவஸ்து பொருட்கள் தீ வைத்து எரிக்கபட்டது