உலக மது ஒழிப்பு தினம் இன்றாகும்(03). மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் தரவுகளுக்கு அமைய மது பாவனையினால் ஒரு வருடத்திற்கு இந்நாட்டில் சுமார் 23,000 பேர் வரை உயிரிழக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. மதுவிற்காக இலங்கையில் ஒருநாளுக்கு சுமார் 247 மில்லியன் ரூபா வரையில் செலவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் திட்ட அதிகாரி அசித தர்ஷன தெரிவிக்கையில், மது தொடர்பில் இலங்கையின் தரவுகளை பயன்படுத்தி கொள்கை ஒன்றினை உருவாக்குதல் காலத்தின் சேவையாகும் எனவும் தெரிவித்திருந்தார்.