உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஊழியர்கள் இன்று(25) எதிர்ப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணையாளர் நாயகம் பதவிக்கு மத்திய வங்கியின் முன்னாள் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஒழுங்கு செய்யப்பட்டதாக உள்நாட்டு இறைவரிச் சேவை சங்கத்தின் செயலாளர் அஜித் புஷ்பகுமார கூறினார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்கள யாப்பின்படி ஆணையாளர் நாயகம் பதவிக்கு தகுதியான ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற போதிலும் அதனை மீறி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.