உள்நாட்டு பால்மா விலையினையும் அதிகரிக்க நடவடிக்கை..

(FASTNEWS | COLOMBO) – இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் , அதற்கு சமமாக உள்நாட்டு பால்மா விலையும் அதிகரிக்கப்பட வேண்டும் என விவசாயம், கிராமப்புற விவகாரங்கள், கால்நடை வளர்ப்பு, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் இன்று(16) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் பால் மா விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சரிடம் வினவிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேற்று(15) நள்ளிரவு தொடக்கம் இறக்குமதி பால் மா விலையை அதிகரிக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அனுமதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.