உள்ளுராட்சி சபை தேர்தல் சட்ட மூலத்தில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் முகமாக அமைச்சரவைக்கு பரிந்துரைகளை முன்வைப்பதற்கு 10 பேர் கொண்ட அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் தலைவராக அமைச்சர் பைஸர் முஸ்தபாவும், செயலாளராக அமைச்சர் கமல் பத்மசிறியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய உறுப்பினர்களாக அமைச்சர் மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, மனோ கனேசன், ரிஷாட் பத்தியுத்தீன், வஜிர அபேவர்தன, ரவுப் ஹக்கீம், சுசில் பிரேம்ஜயந்த், விஜேதாச ராஜபக்ஷ ஆகிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழு, அரசியல் கட்சிகளின் கருத்துக்களைப் பெற்று அது தொடர்பில் பரிந்துரைகளை அமைச்சரவைக்கு முன்வைக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.