உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மேலும் கால தாமதமடையுமானால் சட்ட நடவடிக்கை – பெப்ரல் அமைப்பு

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மேலும் காலதாமதமடையுமானால் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கபடும் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் நாட்களில் இதனோடு சம்பந்தப்பட்டவர்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கு அமைய தமது நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படும் என பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சார்பாக செயற்படவில்லை என்று உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்,23 உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிர்வாக காலம் எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.