உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகளை மாவட்ட மட்டத்தில் வெளியிட முடியாது…

நடைப்பெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகள், மாவட்ட மட்டத்திலோ அல்லது தேசிய மட்டத்திலோ வெளியிடப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிலவும் சட்டத்திற்கு அமைய அவ்வாறு முடிவுகளை வெளியிட ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை என ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.