ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் அமைச்சரான மேர்வின் சில்வா மீண்டும் அரசியல் கட்சி மாறுவதற்கு ஆயத்தமாகியுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் மேர்வின் சில்வா திஸ்ஸமஹாராம பிரதேச சபைக்காக போட்டியிடுவதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் நேற்று திஸ்ஸமஹாராமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.
திஸ்ஸமஹாராம பிரதேச சபையில் போட்டியிடுமாறு மக்களினால் தனக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் எதிர்வரும் காலங்களில் அதனை குறித்து யோசிப்போம் என அவர் கூறியுள்ளார்.