புதிய உள்ளூராட்சி முறையின் கீழ் இடம்பெற்ற தேர்தலில் வெற்றியீட்டிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றமையினால், குறித்த எண்ணிக்கையினை குறைக்க அது குறித்த சீர்திருத்த சட்டமொன்றினை பாராளுமன்றில் முன்வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Rishma