உழவு இயந்திரம் குடை சாய்ந்ததில் 21 பேர் காயம்

பொத்துவில் பிரதான வீதிச் சுற்றுவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை உழவு இயந்திரப் பெட்டி கவிழ்ந்ததால், 21 பேர் காயமடைந்துள்ளதாக பொத்துவில் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொசன் விடுமுறையை கழிப்பதற்காக மொனறாகலை, சியம்பலாண்டுவ பிரதேசத்திலிருந்து பொத்துவில், அறுகம்பைக்கு உழவு இயந்திரத்தில் வந்தவர்களே இந்த விபத்துக்குள்ளானார்கள்.