ஊடகவியலாளர் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் 2 இராணுவ வீரர்கள் கைது…

ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் 2 இராணுவ வீரர்கள் இன்று(19) அதிகாலை கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டவர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இராணுவ மேஜர் ஒருவர் உட்பட 3 இராணுவத்தினரே குற்ற விசாரணைப் பிரவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலார் கீத் நொயர் மீது கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.