ஊடகவியலாளர் லசந்த’வின் பிரேத பரிசோதனைகளில் முரண்பாடு..

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கூர்மையற்ற ஆயுதமொன்றால் தலையில் பலமுறை தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக 2வது பிரேத பரிசோதனையின் போது தெரிய வந்துள்ளது.

இன்று(10) குறித்த அறிக்கை கல்கிஸ்சை முதன்மை நீதவான் மொஹமட் மிஹைல் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டது.

முதல் பிரேத பரிசோதனையின் அறிக்கையில் மற்றும் ஆய்வாளர் அறிக்கையில் காணப்பட்ட முரண்பாடுகள் காரணமாக லசந்த விக்ரமதுங்கவின் உடல் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் அதன்படி 2வது பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

(rizmira)