ஊடகவியலாளர் லசந்த கொலை – இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் ஒருவர் கைது

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை கொலை வழக்கில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரகசிய பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.