(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்போது நாட்டில் இரவு நேர அமுலில் உள்ள நான்கு மணி நேர ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் கிழமை முதல் முழுமையாக நீக்கப்படும் என அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஊரடங்கு சட்டம் நள்ளிரவு 12.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கின்றது.
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் மூன்று மாத காலமாக பகுதி பகுதியாக ஊரடங்கை அமுல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.
ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் தளர்த்தப்படுமாயின் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை கருத்திற் கொண்டு செயற்படுமாறு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.