(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.
எனினும் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு மக்களுக்கு செயற்படுமாறு இராணுவத் தளபதி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில் பயணங்களை கட்டுப்படுத்துமாறும் இந்நிலைமைகளை கருத்திற்கொண்டு இன்று நள்ளிரவு முதல் பிறப்பிக்கப்படும் நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு தொடர்பில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், அவ்வாறானதொரு தீர்மானம் எட்டப்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.