ஊரடங்கு சட்டம் நீக்கம்…

(FASTNEWS|COLOMBO) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம், நேற்று(05) நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த ஊரடங்கு உத்தரவு இன்று(06) காலை 7.00 மணியுடன் தளத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

நீர்கொழும்பு, கொச்சிக்கடை, கட்டுநாயக்க, திவுலபிட்டி, கொடதெனியாவை, பமுனுகமை, ரத்தொலுகமை, சீதுவை, துன்கல்பிட்டி மற்றும் கட்டான ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நேற்று(05) மாலை நீர்கொழும்பு, கொச்சிக்கடை போரதொட்ட பகுதியில் இரு குழுக்கள் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.