ஊரடங்கு பிறப்பிக்க மறுக்கும் பாகிஸ்தான்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தானில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் மீண்டும் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் கொரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1900க்கும் மேல் உள்ளது. இருப்பினும் வைரஸ் தொற்றை ’அறிவால்’ வெல்ல வேண்டும் என அந்நாட்டு மக்களிடம் பிரதமர் இம்ரான்கான் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை என்றாலும், பல மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றதாக தெரிவிக்கின்றன.