ஊவா மாகாணத்தின் 23 பாடசாலைகளில் மண்சரிவு அபாயம் இருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பதுளை, தெல்பெத்த வள்ளுவர் தமிழ் வித்தியாலயம், தெல்பெத்த கலைமகள் தமிழ் வித்தியாலயம், பசறை யூரி தமிழ் வித்தியாலயம், க்ளன்-அல்பின் தோட்டம், தியனகல தமிழ் வித்தியாலயம், ஹாலிஎல – ஸ்பிரிங்வெலி மேமலை தமிழ் வித்தியாலயம், சொர்ணாத்தொட்டை, கொபோ தமிழ் வித்தியாலயம், வெலிமடை விஜய வித்தியாலயம், அம்பஹாவத்தை வெவேகம வித்தியாலயம், ஊவா பரணகம, லுனுவத்தை ரகுபொல முஸ்லிம் வித்தியாலயம், பசறை, நமுனுகுல, கனவரெல்ல இலக்கம் 3 மற்றும் இலக்கம் 1 ஆகிய இரண்டு தமிழ் பாடசாலைகளுடன், பசறை கோணக்கலை தமிழ் வித்தியாலயம், ஹல்தமுல்லை, வல்ஹப்புதென்ன மத்திய மகா வித்தியாலயம், ஹல்தமுல்லை, கொஸ்லாந்தை மீரியாபெத்த தமிழ் வித்தியாலயம், ஹல்தமுல்லை, உடவேரிய தமிழ் வித்தியாலயம், பண்டாரவளை – காகலை தமிழ் வித்தியாலயம், பசறை, நமுனுகுல, பிங்கராவ வித்தியாலயம், எல்ல – கினலன் தமிழ் வித்தியாலயம், ஹாலி-எல – ரொசெட் தமிழ் வித்தியாலயம், பண்டாரவளை – லியங்காவலை தமிழ் வித்தியாலயம், பதுளை –வௌஸ்ஸ ராமகிருஷ்ணா தமிழ் வித்தியாலயம், லுனுகலை அல் ஹமீன் பாடசாலை,
பண்டாரவளை மக்குல் எல்ல வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு மண்சரிவு அபாயம் இருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு பணியகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
(rizmira)