(FASTNEWS|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து காலவரையரையின்றி மூடப்பட்ட, ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில், 20 ஆம் திகதி முதல் சகல விடுதிகளும் காலை 08 மணி முதல் திறக்கப்படும் என பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.