எட்கா உடன்படிக்கையினை கைச்சாத்திட விடமாட்டோம் – ஜேவிபி சூளுரை

எட்கா உடன்படிக்கையுடன் தகவல் தொழில்நுட்ப துறையினை இந்தியாவுடன் கைச்சாதிடுவதற்கு இடம்கொடுக்க கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(21) இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.