எட்கா குறித்த இருதரப்புப் பேச்சுவார்த்தை செவ்வாயன்று.

இந்திய இலங்கை பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை( எட்கா)தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

இதற்காக இந்திய தூதுக்குழு ஒன்று இலங்கைக்கு வரவுள்ளது.

இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை அமைச்சின் கூட்டு நடவடிக்கை செயலாளர் தலைமையிலான குழுவே இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழு இலங்கையின், வெளிநாட்டு வர்த்தக அமைச்சின் தூதுக்குழுவுடன் பேச்சு நடத்தவுள்ளது.

இந்நிலையில் எட்கா உடன்படிக்கை எதிர்வரும் டிசம்பருக்குள் கைச்சாத்திடப்படும் என்று வெளிநாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.