எட்டம்பிட்டிய காட்டுப் பகுதியில் தீப்பரவல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எட்டம்பிட்டிய – பனங்கல காட்டுப் பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்துவதற்காக அப்பகுதிக்கு இடர் முகாமைத்துவ குழு மற்றும் தியதலாவ விமானப்படை பிரிவை சேர்ந்த 20 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பண்டாரவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.