எண்ணெய் கிடங்குகளின் மீது ஐ.எஸ்.தீவிரவாதிகள் தாக்குதல்

லிபியாவில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் 5 எண்ணெய் கிடங்குகளின் மீது ஐ.எஸ்.தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

எண்ணெய் சேகரித்து வைத்திருக்கும் பகுதிக்கு திடீரென்று புகுந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் அங்கிருந்த பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஏற்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் கடுமையாக திருப்பி தாக்கவே அங்கிருந்து தப்பிய தீவிரவாதிகள் தூரத்தில் இருந்து எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

5 கிடங்குகளில் இருந்தும் சுமார் 3 மில்லியன் பீப்பாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய எண்ணெய் கழகம் அறிவித்துள்ளது.

பாதிப்புக்குள்ளான கிடங்குகளில் தீயை கட்டுப்படுத்த ஊழியர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

 

libya_attack_002 libya_attack_003 libya_attack_006 libya_attack_007 libya_attack_008