எதிர்க்கட்சித் தலைவர் பதவி – சபாநாயகரின் பதிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு அமைய ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரை எதிர்க்கட்சி தலைவராக ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரை நியமிக்கும் போது இதுவரை காணப்பட்ட சம்பிரதாயத்தை மீறக்கூடாதென அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த முடிவு தொடர்பில் சிக்கல் காணப்பட்டால் அதனை கட்சிக்குள் தீர்த்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.