(FASTNEWS|COLOMBO ) – ஜப்பானின் அமைதித் தூதர் யுசுஷி அகாஷி, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பின் போது, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு தொடர்பில் விரிவான கலந்துரையாடலொன்று இருவருக்கிடையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு – 07 , விஜேராம இல்லத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஜப்பான் தூதரகத்தின் முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டனர்.