முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் மாத்திரமே தாங்கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாகவும், எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக நீதிமன்றம் செல்லப்போவதில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.
வெள்ள பாதிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(03) கரு ஜெயசூரிய தலைமையில் இடம்பெற்றதன் நிறைவில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.