கொழும்பு நகரை அண்டிய பகுதிகளில் சேரும் குப்பைகளை தொம்பே பகுதியில் கொட்ட எதிர்ப்புத் தெரிவித்து இன்று(20) அப்பகுதி மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஹங்வெல்ல – கிரிதிவெலை வீதியை மறித்து இவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் சேரும் குப்பைகளை தமது பகுதியில் கொட்ட இடமளிக்க முடியாது என, இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும், இன்று வழமைபோல பிலியந்தலை – கரதியான கழிவு கூடத்தில் 349 மெற்றிக் தொன் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வந்துள்ளது.