(FASTNEWS | COLOMBO) – குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் ஷாபி ஷிஹாப்தீனுக்கு பிணை வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து குருநாகல் நகரில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குருநாகல் பகுதி மக்களும் குருணாகல் கைத்தியசாலையின் ஊழியர்களும் இணைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையினால் குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும், பாதுகாப்பு நிமித்தம் விசேட அதிரடிப் படையினர் தளத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.