எதிர்வரும் அரசியல் குறித்து தீர்மானங்கள் சிலவற்றினை பெற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 19ம் திகதி இரவு 7.00 மணியளவில் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் கூடவுள்ளது.
கட்சியின் மறுசீரமைப்பு குறித்த நிகழ்ச்சித் திட்டம், ஆண்டு விழா கொண்டாட்டம், புதிய அமைப்பாளர்களை நியமித்தல் மற்றும் தற்போதைய அரசியல் விவகாரங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடி தீர்மானம் ஒன்றினை எட்டவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் பேராசிரியருமான ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.