எதிர்வரும் காலங்களுக்கு மின்தடை இல்லை.

எதிர்வரும் சில வருடங்களுக்கு மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட எவ்வித வாய்ப்பும் இல்லை என, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களுக்கு தேவையான மின் கேள்வியை பூர்த்தி செய்யத் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, அந்த அமைச்சின் செயலாளர் பேராசிரியர் பீ.எம்.எஸ்.படகொட தெரிவித்துள்ளார்.

2018ம் ஆண்டளவில் நாட்டில் மின் பற்றாக்குறை ஏற்படும் என சில குழுவினரால் ஆதாரமற்ற தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.