எதிர்வரும் திங்கட்கிழமை(01) முதல் திறைசேரியின் ஆலோசனைக்கமைய ரயில்வே திணைக்களமானது ரயில் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த இந்த கட்டண மறுசீரமைப்பு 10 வருடங்களின் பின்னரே முன்னெடுக்கப்படுவதாகவும், கட்டண அதிகரிப்பின் பின்னரும் ரயில்வே கட்டணங்கள் பேரூந்து கட்டணத்திலும் பார்க்க குறைவாகவே காணப்படுவதாகவும் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆரம்ப கட்டணத்தில் மாற்றம் ஏதும் இல்லையெனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.