எதிர்வரும் தினங்களில் நாட்டிலும், நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளிலும் மழை அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
விசேடமாக, மத்திய, சப்ரகமுவ, தெற்கு, ஊவா மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று தேசிய இடர்முகாமைத்துவ மத்திய நிலைய பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி அறிவித்துள்ளார்