எதிர்வரும் 03 ஆம் திகதி முதல் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கை…

(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் 03 ஆம் திகதி முதல் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று(25) ஹிங்குரங்கொட ஆனந்த பாலிக்கா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களை, கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.