ஈழத்தில் பயங்கரவாதிகள் என்று உலகத்தவரால் அறியப்படும் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், தமிழ் பெண்கைள இராணுவம் வேட்டையாடிய கொடூரத்துக்கு முல்லைத்தீவு விசுவமடுப்பகுதியில் படையினரால் கற்பழிக்கப்பட்ட இரு பெண்கள் சாட்சியாகினர். இந்தச் சாட்சியினாலேயே குறித்த படையினருக்கு 25 வருட சிறைத்தண்டனை மேல்நீதிமக்ற நீதிபதி இளஞ்செழியனால் வழங்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு பெண்ணின் சாட்சி இது
‘என்னை ஒருபக்கமாகவும், மற்றவரை மறுபக்கத்திலும் இராணுவத்தினர் இழுத்துச்
சென்றார்கள். நான் 5 குழந்தைகளின் தாய் என்னை ஒன்றும் செய்ய வேண்டாம் என
அவர்களிடம் அழுதபடி கெஞ்சினேன். அவர்கள் எனது உடைகளை பகுதியாகக்
களைந்தார்கள். எனக்கு மாதவிலக்கு என்னை ஒன்றும் செய்ய வேண்டாம் என
அப்போது அவர்களிடம் நான் சொன்னேன். அவர்கள் எனது உள்ளாடைகளைக் கழற்றி
பார்த்தார்கள். பார்த்த பின்னர், எனது கைகளைக் கட்டி கீழே
தள்ளிவிட்டார்கள். அப்போது சுமார் 20 மீற்றர் தூரத்தில் என்னை விடுங்கோ
என்னை விடுங்கோ என மற்ற பெண் கத்திக்கொண்டிருந்தார். அவர் அவ்வாறு கத்த,
கத்த வீட்டின் பின்னால் இருந்த மற்ற காணிக்குள் அவரை அவர்கள் இழுத்துச்
சென்றார்கள்’