“என்னை கொலை செய்ய சதி.. என்னை நாடுகடத்த வேண்டாம்” – துபாய் நீதிமன்றில் மதூஷ் மனு…

(FASTNEWS | COLOMBO) – தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதன் கராணமாக இலங்கைக்கு நாடுகடத்த வேண்டாம் எனவும் கோரி பாதாள உலகக் குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷ் துபாய் நீதிமன்றில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய நாட்டு சட்டத்தரணி ஒருவரின் மூலம் மாகந்துரே மதூஷ் துபாய் நீதிமன்றுக்கு இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக துபாய் அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தன்னை இலங்கைக்கு நாடு கடத்தினால் பாதுகாப்பு பிரிவு மற்றும் எனக்கு எதிரான பாதாள உலகக் குழுக்கள் என்னை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாக மாகந்துரே மதூஷ் முன்வைத்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.