எமக்கு பிணைமுறி கள்வர்கள் என்று பெயர் – ஹரீன்…

ஐக்கிய தேசியக் கட்சிக்கு இன்று பிணைமுறி கள்வர்கள் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக சந்திப்பின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“இன்று விசேட நீதிமன்றங்கள் குறித்து பத்திரிகைகளில் எழுதுகின்றனர். அதனை நாமே முன்வைத்தோம். பிரதமரே சென்று சாட்சி வழங்கினார். அதனால் நாம் தூக்கமிழந்தோம்… இப்போது எமக்கு கூறுகின்றனர் பிணைமுறி கள்வர்கள் என்று… நல்ல பருப்புத்தான் இதுவும்.. அதை நாம் வேறு வழியின்றி சாப்பிட்டோம்…”