(FASTNEWS |COLOMBO)- மார்ச் 12 இயக்கத்தின் 04 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு எற்பாடு செய்யப்பட்டுள்ள, ‘எமது கனவு ஜனாதிபதி’ என்ற வேலைத்திட்டம் இன்று(12) காலை 10.00 மணிக்கு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து தெரிவாகும் ஜனாதிபதி தொடர்பில், மக்களிடையே கலந்துரையாடல்களை மேற்கொள்வதே, குறித்த இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாக அமைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.