எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றின்போது காவல்துறையினரால் தாக்கப்பட்டு மரணித்ததாக கூறப்படும் சுமித் பிரசன்னவின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காவல்துறை உயர் அதிகாரியின் சேவை தடை நீக்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
எனினும் அவருக்கான பதவிகள் எதுவும் வழங்கப்படமாட்டாது எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.