எம்பிலிப்பிடி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 பேர் காயம்

(FASTNEWS|COLOMBO) இரத்தினபுரி – எம்பிலிப்பிடி பிரதான வீதி கொடகவெல – கலஹிடிய பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

இரத்தினபுரியில் இருந்து எம்பிலிப்பிடிய நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விபத்தில் காயமடைந்த 13 பேர் கொடகவெல பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிசையளிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 5 பேர் கஹவத்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்