எயார்பஸ் ஒத்திவைப்பு விவாதம் அடுத்தவாரம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கன் விமான சேவையின் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பாராளுமன்ற சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த சபை ஒத்திவைப்பு விவாதம் அன்றைய தினம் பிற்பகல் 12.30 முதல் இரவு 7.30 வரை இடம்பெறவுள்ளது.

நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் நிறைவேற்றுக் குழுவில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.