எரிபொருள் விநியோகத்திற்கு தடங்கலாக இருந்த போரட்டக்காரர்கள் அகற்றப்படுகிறார்கள்

முப்படையைச் சேர்ந்த வீரர்கள் எரிபொருள் விநியோகத்திற்கு தடங்கலாக இருந்த போரட்டக்காரர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். தற்போது வரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே எரிபொருட்கள் நிரப்பப்பட்ட 15 எரிபொருள் தாங்கிகள் (பவுசர்கள்) கொலன்னாவ எரிபொருள் களஞ்சியசாலையை விட்டு வெளியேறி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகத்திற்காக சென்றுள்ளன.