(FASTNEWS|COLOMBO) பண்டிகைக் காலம் என்பதால் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இம்முறை எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என நிதி அமைச்சு அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.