எரிபொருள் விலை தொடர்பிலான சூத்திரத்தினை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதா இல்லை திருத்தியமைப்பதா என்பது தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் முன்வைக்கவுள்ள வரவு-செலவுத் திட்டத்தில் தீர்மானம் ஒன்று எட்டப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று(14) காலை ஊடக பிரதானிகளை சந்தித்த வேளையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து பிரச்சினைகள் உள்ளதா என ஜனாதிபதி இதன்போது அவதானம் செலுத்தியுள்ளார். மேலும் இது தொடர்பில் தான் புதிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை சந்திக்க உள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தார்.